புதன், ஜனவரி 4

கேவலர்கள் - ஆதவன் தீட்சண்யா

காட்டேரியும் கழுகும் நரியும் புலியும்  
அஞ்சியொடுங்கும் கொடியோரென
மிருகக்கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை
தத்தெடுத்திருக்கும் அரசாங்கம் 
அவர்களிடத்தில் கொடுத்திருக்கிறது
அதிகாரத்தையும் ஆயுதங்களையும் 

ஒழுங்கீனங்களையும் உற்பாதங்களையும்
ஊரெங்கும் பரப்பி  
குற்றங்களின் கிடங்கில் புழுத்து நெளியும் அவர்களது
ரத்தநாளத்தில் நிறைந்திருப்பதோ
சாக்கடையும் நஞ்சும் 

வலியோரிடம் இரந்தும் எளியோரிடம் பறித்தும்
வயிறுவளர்க்கும் கேவலத்திற்கு
படிப்பெதற்கு பயிற்சிதானெதற்கு

பாலுறுப்புகளாலான வசைச்சொற்களை மட்டுமே  
மொழியறிவாய் கொண்ட அவர்கள்
மனித உடலில் குறிகளையே தேடியலைகிறார்கள்

அவிழ்த்துக் காட்டத்தான் போகிறார்கள் என்றான பிறகு 
சீருடையோ வேறுடையோ வீண்
அம்மணமாகவே இருக்கட்டும்

அறுத்தெடுக்கத் தோதாயிருக்கும் எங்களுக்கு.

4.1.2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...