ஞாயிறு, ஏப்ரல் 30

பெரிதினும் பெரிது கேள்... - ஆதவன் தீட்சண்யா



யானையே மோதினாலும்  அதிராத
அரண்மனையின் கதவு
மரம் இரும்பு கல் மற்றும்
எதற்கும் இளகாத உணர்வினாலானது
  
அங்குலம்தோறும்
புதுப்புது  பூட்டுகளாலும் தாழ்களாலும்
அணிசெய்து வலுவேற்றப்பட்ட
அந்தப் புராதனக்கதவின் பின்னே
வதைபட்டுக்கொண்டிருக்கிறது
நம் ஒவ்வொருவரது உயிரும்

உயிரை மீட்டெடுக்கத் துடிக்கும் நம்மை
அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்திட
ஆயுதங்களேந்தி அணிவகுப்பதிலும்
கதவுக்கு வெகுதொலைவிலேயே நிறுத்திவிட
தடையரண்களை எழுப்புவதிலும்
வாயிற்காப்பாளர்கள்
மும்முரமாயிருக்கும் இவ்வேளையில்
நாம் ஏன்
கதவுக்குப் பதிலாக
அரண்மனையையே தகர்க்கக்கூடாது?


24.04.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...