இதோ வந்துவிட்டன முப்படைகளும்
‘ஐந்தாம்படை’யும்கூட
அவர்களுடனேயேதான் இருக்கிறது
"...இதனால் அங்கு சிறிதுநேரம்
பரபரப்ப நிலவியது" என்று
எம் உயிர்
கரையும் ஒவ்வொரு
நொடியையும்
துல்லியமாய்
ஒளியொலி பரப்பிட
24X7
செய்திச்சேனல்களும் குவிந்துவிட்டன
நைந்த சொற்களை இரந்து
முன்கூட்டியே
எழுதிவைத்திருக்கும்
கண்டன அறிக்கையோடு
காத்திருக்கிறார்கள்
கட்சித்தலைவர்களும்கூட
கட்சித்தலைவர்களும்கூட
கணினித்திரையே
கருகிப்போகுமளவுக்கு
அரசியல்வாதிகளைத்
திட்டி நிலைத்தகவல்
எழுதிவிட்டு
அடுத்த பரபரப்புக்குத்
தாவும் அவசரத்துடன்
முகப்புத்தகப்
போராளிகளால் திரட்டப்படுகின்றன
கார்ட்டூன்களும் வசைகளும்
கார்ட்டூன்களும் வசைகளும்
ஏதொன்றையும்
பிராஜக்டாக காட்டி
பெருந்தொகைப்
பெயர்த்துவிடும் ஆசையில்
ஏதேதோ பெயர்களில்
பதுங்கியலையும் என்.ஜி.ஓக்கள்
எம்மிலும் தீவரமாய் பேசுகின்றன எம்மைப்பற்றி
கறிகாய் வாங்கி
ஆக்கியவித்து தின்றுவிட்டு
கவலைகொண்டதான
பாவனையோடு வந்திருக்கும்
இந்த ஆதவனோ
சந்தடிச்சாக்கில்
எம்மைக் கச்சாப்பொருளாக்கி
கவிதையொன்றை
யாத்துவிடும் எத்தனிப்பிலிருக்கிறான்
கடலிறங்கிப்
போராடும் எமக்கான
ஆதரவாய்
அவரவர் ஊரின் குளம்குட்டையில் இறங்கவோ
ஆங்காங்கே மணலுக்குள் புதையவோ முயலாது
அவரவர் ஊரின் குளம்குட்டையில் இறங்கவோ
ஆங்காங்கே மணலுக்குள் புதையவோ முயலாது
கரையிலிருந்தே
கர்ஜிக்கிறார்கள் இவர்கள்
கடல்மூழ்கிச்
சாகும் எம்மை
கணக்கெடுத்து அறிவிக்க
மறுகரையில்
காத்திருக்கிறது அரசாங்கம்.
மிகச் சரியான சாட்டை அடிகள் இந்தக் கவிதை வரிகள்! வாசிக்கும் போதே சுரீர் சுரீரென வலிக்கின்றன - நம்மாலும் எதுவும் செய்ய முடிய வில்லையே யென்கிற குற்ற உணர்வுகளுடன்.
பதிலளிநீக்குபிணம் தின்னும் கழுகுகள் போல் கரையெங்கும் வியாபித்துக் காத்திருக்கின்றன ஊடகங்கள் தங்கள் தங்களின் பசிப் பார்வைகளோடு!